Skip to main content

ஷாருக்கானின் அப்பழுக்கற்ற மனிதநேயம்

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும்
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் படிபடியாக வளர்ந்து வருகிற இந்த சூழலில் மருத்துவர்களும், காவல் துறையினரும் நம் பாதுகாப்புக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு ஈடாக தூய்மை பணியாளர்களும் இரவுபகல் பாராது உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த தூய்மை பணியாளர்களின் சேவையை உலகிற்கு எடுத்துரைக்கும் வண்ணம் பாலிவுட் ஸடார் ஷாருக்கான் ஒரு அருமையான செயலை செய்திருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பரவலாக காணப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரட‌ங்கின்போது அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த தருணத்தில் தூய்மை பணியாளர்கள் வீதியில் பணிபுரிந்து நாங்கள் சமூக அக்கறையின் இன்னொரு தூண் என்பதை நிரூபிக்கின்றனர்.

இவர்களின் இந்த சேவைக்கு மரியாதை செலுத்தும் வண்ணமும் அவர்களுக்கு
உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும் விதமாகவும் மகாராஷ்டிர மாநில தூய்மை பணியாளர்களுக்கு 25,000 தூய்மை பணி உபகரணங்களை நடிகர் ஷாருக்கான் தானமாக வழங்கியுள்ளார்.

இவரின் இந்த செயல்பாடு பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

Comments